search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் ரகளை"

    • மாமல்லபுரம் போலீசார் ஆட்டோவை துரத்தி சென்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    சென்னை திருவொற்றியூர் கொருக்குபேட்டை பகுதியை சேர்ந்த சுரேந்தர் வயது 25, விஜய் வயது 23, சேகர் வயது 23 மூவரும் நண்பர்கள், இவர்கள் மாமல்லபுரத்தில் ரூம் எடுத்து தங்கியிருந்து ஹோட்டல்களில் நடக்கும் ஈவெண்ட்களில் கேட்டரிங் வேலை செய்து வருகின்றனர்.

    சென்னை செல்வதற்காக மாமல்லபுரம் இ.சி.ஆர் பஸ் நிறுத்தத்திற்கு ஆட்டோவில் கஞ்சா போதையில் வந்து இறங்கினர். பணம் தகராறில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி விரட்டி அடித்தனர். பின்னர் அங்கு வந்த பஸ்ஸில் ஏறுவது போல் நடித்து, ஏற முயன்ற பயணி ஒருவரின் செல்போனை பறித்துள்ளனர்.


    இதனால் பயணிக்கும் அவர்களுக்கும் பஸ் நிறுத்தத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. சக பயணிகள் அவர்கள் மூவரையும் கண்டித்ததால் ஒருவன் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பயணிகள் அனைவரையும் மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர்.

    பின்னர் அங்கு வந்த இ.சி.ஆர் ஆட்டோ ஸ்டான்ட் ஆணந்தன் என்பவரது ஆட்டோவை அடித்து நிறுத்தி அவரை மிறட்டி தப்பி ஓட முயற்சித்தனர். தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் ஆட்டோவை துரத்தி சென்றனர். ஆட்டோவில் இருந்து இறங்கி ஓட முயன்ற மூன்று பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாலிபர் ஆத்திரமடைந்து இளம் பெண்ணின் ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினார்.
    • பெண் ஒருவர் இந்த சம்பவத்தை கண்டு வாலிபரை தடுக்க முயற்சித்தார்.

    திருப்பதி:

    ஐதராபாத் ஜவகர் நகர் பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் இருந்து 28 வயது இளம்பெண் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு வெளியே வந்தார்.

    அப்போது வழியில் மது போதையில் இருந்த மாரய்யா (வயது 38). என்பவர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார்.

    இதனை வாலிபரின் தாய் அருகில் இருந்து வேடிக்கை பார்த்தார். இதனால் ஆத்திரமடைந்த இளம் பெண் மாரய்யாவை தாக்க முயன்றார்.

    இதில் வாலிபர் ஆத்திரமடைந்து இளம் பெண்ணின் ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினார்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற பெண் ஒருவர் இந்த சம்பவத்தை கண்டு வாலிபரை தடுக்க முயற்சித்தார். அவரையும் வாலிபர் தாக்கினார்.

    இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் பலமுறை கெஞ்சியபோதும் மது போதையில் இருந்த மாரய்யா அவரை சுமார் 15 நிமிடங்கள் நடைபாதையில் நிர்வாணமாக நிற்க வைத்தார். மேலும் பாலியல் தொல்லை கொடுத்தார்.

    ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை.

    பின்னர் மாரய்யா அங்கிருந்து கிளம்பியதும் சிலர் அருகில் இருந்த பிளக்ஸ் பேனர்களை எடுத்து அந்த இளம்பெண் மீது போர்த்தினர். மேலும் ஜவகர் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரய்யாவை நேற்று கைது செய்தனர்.

    ×